இலங்கையில் விரைவில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவுள்ளது!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் விரைவில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவுள்ளது!!!!

இலங்கையில் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

எமது கோரிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை என்றால் இந்த நிலை ஏற்படும் என்று, சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முணையத்தை விற்பனை செய்ய மாட்டோம் என கடிதம் மூலம் உறுதிமூலம் வழங்குவது அவசியம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவில்லை என்றால் பணி பகிஷ்கரிப்பு தொடரும் என அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் நாட்களில் உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான பொறுப்பை எங்கள் சங்கம் ஏற்றுக்கொள்ளாது.

இந்த விடயம் குறித்து துறைசார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும் அவை தோல்வியில் முடிவடைந்துள்ளன.

குறித்த கலந்துரையாடல் தோல்வியடைந்த பின்னர் ஊடகங்களிலும் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.