
இந்நிலையில், இவருடன் 19 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோருடன் நெருங்கி செயற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த அனைவரும் வீடுகளில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலன்னறுவை சுகாதார சேவை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
குறித்த அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக PCR பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.
அந்த பாதுகாப்பு அதிகாரியின் மனைவி மற்றும் மகளுக்கு தற்போது PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.