இன்றைய தினம் இலங்கையில் கொரானாவால் பாதிக்கப்பட்ட 12 ஆவது மரணம் பதிவானது.
அதன்படி, அண்மையில் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார்.
குறித்த பெண், கொரோனா தெற்றுக்குள்ளான நிலையில் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் உயிரிழந்த பெண் ஏற்கனவே புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.