மதுமாதவ மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்! அலி சப்ரிக்கு முஜிபுர் ரஹ்மான் சவால்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மதுமாதவ மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்! அலி சப்ரிக்கு முஜிபுர் ரஹ்மான் சவால்!

இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு உண்மையான நோக்கம் காணப்படுமாயின் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நீதி அமைச்சருக்கு சவால் விடுத்துள்ளார்.

"மதுமாதவ அரவிந்த கடந்த காலங்களில் பல இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளார், இனவாத கருத்துக்களை மாத்திரமல்ல கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வன்முறையை தூண்டும் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார்.

நீதி அமைச்சர் இப்போது அவருக்கு எதிராக, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் சட்டத்தை செயல்படுத்த முடியும்." என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் இனவாதத்தை தூண்டியதாக நீதி அமைச்சர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.