காதி நீதிமன்றில் பெண்களை கெட்ட வார்த்தையில் திட்டுகின்றனர். ஜனாதிபதிக்கு முஸ்லீம் பெண்ணொருவர் கடிதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காதி நீதிமன்றில் பெண்களை கெட்ட வார்த்தையில் திட்டுகின்றனர். ஜனாதிபதிக்கு முஸ்லீம் பெண்ணொருவர் கடிதம்!

காதி நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண்கள் பாரிய அநீதிக்கு உள்ளாக்கப்படுவதாக முஸ்லிம் பெண்ணொருவர் நேற்று (28) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

காதி நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் அநீதியானது எனவும் அங்கு பெண்களை கெட்டவார்த்தைகளால் கூட திட்டுவதாகவும் அந்த பெண் ஜனாதிபதியிடம் கையளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பெண் ஜனாதிபதியிடம் கையளித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நான் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன் விவாகரத்து செய்த பெண். என்னிடம் இருந்து பிரிந்த கணவன், எனது பிள்ளைகளின் வாழ்க்கை செலவுகளுக்காக பணத்தை கொடுப்பதில்லை.

காதி நீதிமன்றம் வழங்கிய தவறான தீர்ப்பே இதற்கு காரணம். எனது நிலைமை குறித்து காதி நீதிமன்றத்தில் முறையிட்டபோதிலும் எந்த நீதியும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

இது குறித்து அனுதாபத்துடன் கவனம் செலுத்தி எனக்கு நியாயத்தை பெற்று தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்." என குறிப்பிட்டிருந்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.