இலங்கைத் தீவு ‘தமிழர் தேசம்’ வரலாறு தெரிந்தால் என்னுடன் பகிரங்கமாக விவாதத்திற்கு வரவும் - டாக்டர் விக்கிரமபாகு கருணாரட்ன

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைத் தீவு ‘தமிழர் தேசம்’ வரலாறு தெரிந்தால் என்னுடன் பகிரங்கமாக விவாதத்திற்கு வரவும் - டாக்டர் விக்கிரமபாகு கருணாரட்ன


இலங்கைத் தீவு ‘தமிழர் தேசம்’ என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முதுகெலும்பு இருந்தால் எல்லாவல மேதானந்த தேரர் என்னுடன் பகிரங்கமாக விவாதத்திற்கு தயாரா என்று இலங்கை புத்த சமயத் தலைவர் ஒருவருக்கு மூத்த சிங்களக் கல்விமானான டாக்டர் விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார்.

சிங்களவர்கள் தான் வந்தேறி குடிகள் என்பதையும் வடக்கு தமிழர்களின் பூர்விகம் என்ற யாதார்த்த பூர்வமான உண்மையையும் தேரருக்கு கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

வந்தேறி குடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோர முடியும்? என நாடாளுமன்ற உறுப்பினரா எல்லாமல மேதானந்தா தேரர் என்ற புத்த பிக்கு கூறியது தொடர்பில் கருத்துரைத்த போதே விக்கிரமபாகு கருணாரட்னா இவ்வாறு கூறினார்.

அத்துடன் மேதானந்தா தேரர் ஒரு கல்விமானாக இருந்து கொண்டு வரலாறு தெரிந்தும் சிங்கள மக்கள் மகிழ்ச்சிப் படுத்துவதற்கு போலிக் கதைகளை கட்டவிழ்த்து விட்டு இது தான் வரலாறு, இதிகாசம் என்றும் காட்டி வருகிறார் என்றும் குறிப்பிட்ட அவர், விஜய மன்னன் இங்கு ஆட்சியின் போதுதான் பௌத்த மதம் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள் தான் ஆட்சி செய்தனர் என்றும் அவர் கூறினார்.


$ads={1}

இந்தியாவில் இருந்து வந்தவர்கள் தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்கு பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்த வந்தவர்கள் சிங்களவர்கள் என்று பறை சாற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் தமிழர்கள் அப்படியல்ல என்றும் அவர்கள் இலங்கையைப் பூர்வீகமாகவே கொண்டவர்கள் எனவும் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னா உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.