119 இற்கு அழைப்பை ஏற்படுத்தியவர் கைது! ஏன்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

119 இற்கு அழைப்பை ஏற்படுத்தியவர் கைது! ஏன்?


நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நோர்வூட் சென். ஜோன்டிலரி மேற்பிரிவு தோட்ட பகுதியில் உள்ள நபர் ஒருவர் தொடர்ச்சியாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு பொய்யான முறைபாடுகளை பதிவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரை நோர்வூட் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் தொடர்சியாக 119 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பொய்யான முறைபாடுகளை பதிவு செய்து வந்தமை தொடர்பில் அழைப்பினை பெற்று, இலக்கத்தின் உரிமையாளரை இனங்கண்டு கொள்வதற்காக நோர்வூட் பொலிஸார், ஹட்டன் நீதிமன்றத்தில் பீ அறிக்கையினை சமர்பித்து, அதன் ஊடாக அனுமதியினை பெற்று குறித்த தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கையடக்க தொலைபேசியினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.