தெஹிவளை மிருகக்காட்சிசாலையினை இடமாற்றம் செய்ய தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தெஹிவளை மிருகக்காட்சிசாலையினை இடமாற்றம் செய்ய தீர்மானம்!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பிலியந்தலை - கஹபொல பகுதிக்கு மாற்றுவதற்கான திட்டம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளைப் பார்ப்பது ஒரு காலாவதியான முறைமையாகும்.


$ads={1}

ஆகையினால் மிருகக்காட்சிசாலையை நவீன உலகத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டியது அவசியம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அது விலங்குக் கொடுமைக்கு வழிவகுக்காத வகையில் செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுலா துறை அமைச்சகத்தில் விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்கா அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.



தெஹிளை மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை வழங்க மாதத்திற்கு சுமார் 40 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யானைகளைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றை ஊர்வலங்களில் பயன்படுத்த கொடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில், வழிகாட்டுதல்கள் விரைவில் அமைச்சரவையில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.