அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட அமைச்சர் அலி சப்ரி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட அமைச்சர் அலி சப்ரி!

புதிய அரசின் நீதியமைச்சர் அலி சப்ரி நேற்று (29) முற்பகல் கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதன்போது அவர் முதலாவதாக மகாநாயக்க திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இதன்போது அவர் 19ஆவது அரசியலமைப்பை இல்லாதொழித்து புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் அறிமுகம் செய்வது குறித்தும் நீதியமைச்சர் மகாநாயக்க தேரர்களிடம் விளக்கினார்.

அத்துடன் முஸ்லிம் சமூகத்தில் இளவயதில் திருமணம் செய்யும் நிலமை இருப்பதாகவும், அதனை தடுக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது தேரர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் சங்கங்கள் தன்னை வந்து சந்தித்து இது தொடர்பில் புகார் தெரிவித்து உள்ளதாகவும் அலி சப்ரி கூறியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.