இலங்கையின் மூத்த குடிகள் சிங்களவர்கள் என்பதை நிரூபிக்க விக்னேஷ்வரனுடன் விவாதிக்க தயார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையின் மூத்த குடிகள் சிங்களவர்கள் என்பதை நிரூபிக்க விக்னேஷ்வரனுடன் விவாதிக்க தயார்!

இலங்கையின் மூத்த குடிகள் சிங்கள மக்கள் என்பதை நிரூபிப்பதற்கு வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஷ்வரனுடன் விவாதிக்க தயாராக இருக்கின்றோமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் விதான தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போது விக்னேஷ்வரன் வடமாகாண முதலமைச்சர் அல்ல. அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் சம்பந்தனைவிட தானே தமிழ் மக்களின் வீரர் என்பதை வெளிக்காட்டவே முயற்சிக்கின்றார்.

மேலும், அவர் புலம்பெயர்ந்தோரின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தும் வகையிலேயே செயற்படுகின்றார். அதனால் மகாவீரர் போன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றார்.

அவருடைய கருத்துக்களுக்கு நாங்கள் முழு எதிர்ப்பையும் தெரிவிக்கின்றோம். அத்தோடு இலங்கையின் மூத்த குடிமக்கள் சிங்களவர் மற்றும் இந்த நாட்டின் முதல் உரிமை சிங்களவர்களுக்கு இருக்கின்றதென்பதை நிரூபிப்பதற்கு அவருடன் விவாதம் புரிய தயாராக இருக்கின்றோம்.

இதேவேளை, நாங்கள் தமிழ் மக்களுடன் இணைந்து சமாதானத்துடன் செயற்படுவதற்கு தயாராகவே இருக்கின்றோம். இந்த நிலையில் விக்னேஷ்வரன் தெரிவிக்கும் கருத்துக்களினால் இந்த நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள சகோதரத்துவத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.