சஹ்ரான் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஹ்ரான் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு உளவுத்துறையின் ஒத்துழைப்பு கிடைக்க முன்னரே பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமுக்கு நாட்டில் தாக்குதலொன்றை முன்னெடுக்கும் ஆற்றல் இருந்தாக அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதற்கான உடலியல் மற்றும் உளவியல் ரீதியான இயலுமை சஹ்ரானுக்கு காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

$ads={2}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்,

அத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு வண்ணாத்திவில்லு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது நாட்டில் தாக்குதலொனறை நடத்துவதற்கான சஹ்ரானின் இயலுமையை புலனாய்வுத்துறை கண்டறிந்ததாக நிலந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்,

எவ்வாறாயினும் சஹ்ரான் வசமிருந்த ஏனைய வெடி பொருட்கள் தொடர்பில் அறிக்கையொன்று தம்மிடம் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


$ads={1}

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி தகவல் கிடைத்ததும் சஹ்ரான் குறித்த அறிக்கையொன்றை பெற்றுக் கொண்டதாக அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.,

இந்த நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தனவை ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.