சிறுவர் துஷ்பிரயோகம்; நடன ஆசிரியர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுவர் துஷ்பிரயோகம்; நடன ஆசிரியர் கைது!

சிறுவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில், நடன ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேல் மாகாணத்தைச் சேர்ந்த 42 வயதான நடன ஆசிரியர் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளளார்.

இதனால் குறித்த சிறுவன் கடுமையாக மன உளைச்சலுக்கு உள்ளானதாக தெரியவந்தது.

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஒரு அரங்கத்தில் நடந்த முகமூடி நிகழ்வுக்கான பயிற்சியின்போது, குறித்த சிறுவனை இரவு உணவை எடுத்துவர தனது காரில் அழைத்துச் சென்றமை தெரியவந்தது, அந்த சமயத்தில் அந்த சிறுவனுக்கு போதைப்பொருள் அடங்கிய பானத்தை குடிக்க கொடுத்து கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்தது.

இந்த சம்பவத்திற்கு முன்னர், அந்த நடன ஆசிரியர் 03 வயது குறைந்த சிறுவர்கள் உட்பட 11 பேர் அடங்கிய குழுவை வெளிநாட்டு ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின் போதும் வயது குறைந்த சிறுவனை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.