கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்த பெண் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்த பெண் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்!


களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அளுத்கம சுற்றுலா ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பி சென்றுள்ளார் என வைத்தியசாலை இயக்குனர் விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து நாட்டிற்கு வந்த கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 80 வயதான ஏ.ஏக்கநாயக்க என்ற 80 வயதான பெண்ணே இவ்வாறு சென்றுள்ளார். அவர் அளுத்கம, மொரகல்லே, ஈடன் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

குறித்த பெண் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் தாதி மருந்து வழங்குவதற்கு அவரை தேடும் போது அவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக உறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் கொரோனா உறுதியாகவில்லை எனவும் கொரோனா என சந்தேகிக்கும் நிலையும் உறுதியாகவில்லை என வைத்தியசாலை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.