மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் திகதி தொடர்பிலான செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் திகதி தொடர்பிலான செய்தி!

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படலாம் என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நல்லாட்சி அரசால் ஒத்திவைக்கப்பட்ட மாகாணசபை தேர்தலை அடுத்த வருடம் பிப்ரவரி அல்லது மார்ச் நடத்துவதற்கு ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.
$ads={1}

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் உள்ள 9 மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தலை நடத்துவதற்குசட்டரீதியாக, தடங்கலாக உள்ள காரணிகள் சட்டத்திருத்தம் மூலம் சீர் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அரசு பரிசீலித்தாலும் நிதி பற்றாக்குறை காரணமாக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபின்னரே இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.