இன்று (15) அதிகாலை இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
காலியிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதம், குறித்த நபர் மீது மோதியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தையைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில், வெள்ளவத்தை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.