அலி சப்ரியின் அமைச்சுப் பதவி நியமிப்பு தொடர்பில் எழுந்த எதிர்ப்பை நாம் முறையடித்தோம் - நாமல்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அலி சப்ரியின் அமைச்சுப் பதவி நியமிப்பு தொடர்பில் எழுந்த எதிர்ப்பை நாம் முறையடித்தோம் - நாமல்

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜனாதிபதியின் வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணி என்பதற்காக அவருக்கு புதிய நீதிமைச்சருக்கான பதவி வழங்கப்படவில்லை என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

$ads={1}

அலி சப்ரி சட்டத்தரணியாக பல வழக்குகளில் ஆஜராகி இருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ வாராந்த பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

குறிப்பாக கடந்த அரசாங்க காலப்பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிக்குமார் மற்றும் படையினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது, அலி சப்ரி அவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

இந்நிலையில் அடிப்படைவாதிகளுக்கு அலி சப்ரியை நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றாக இருப்பதாக நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

$ads={2}

ஜனாதிபதி சட்டத்தரணியும் தற்போதைய நீதியமைச்சருமான அலி சப்ரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.