அலி சப்ரி சட்டத்தரணியாக பல வழக்குகளில் ஆஜராகி இருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ வாராந்த பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
குறிப்பாக கடந்த அரசாங்க காலப்பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிக்குமார் மற்றும் படையினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது, அலி சப்ரி அவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
இந்நிலையில் அடிப்படைவாதிகளுக்கு அலி சப்ரியை நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றாக இருப்பதாக நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி சட்டத்தரணியும் தற்போதைய நீதியமைச்சருமான அலி சப்ரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது