இலங்கை அரசியல் வரலாற்றில் புரட்சிய ஏற்படுத்தியுள்ளோம் - சஜித்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை அரசியல் வரலாற்றில் புரட்சிய ஏற்படுத்தியுள்ளோம் - சஜித்

இலங்கை வரலாற்றில் ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் புரட்சி ஒன்றை செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸதெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
$ads={1}
வலுவாக பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். சுற்றியிருந்து கல்லடிக்கும் போது எங்களால் முன்னோக்கி செல்ல முடிந்தது.

இது தான் இந்த நாட்டில் ஒரே அரசியல் மாற்றம் என நாட்டிற்கே கூற விரும்புகின்றேன். இந்த சக்தி தான் எதிர்வரும் காலங்களில்நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் சக்தியாகும்.

மிக குறுகிய காலப்பகுதியில் இந்த அளவு மக்களை இணைத்துக் கொண்ட ஒரே கட்சி எங்கள் கட்சியாகும்.
$ads={2}
தாமரை மொட்டிற்கு இவ்வளவு மக்களை சேர்க்க இரண்டு வருடங்களாகியது. தேர்தலுக்கு முகம் கொடுக்க நான்கு வருடங்களாகியது.

இவ்வளவு குறுகிய காலத்தில் எந்த ஒரு கட்சியாலும் இவ்வளவு பெரிய வெற்றியை பெற முடியவில்லை. 28 லட்சத்துக்கும் அதிகமானமக்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.