விமான விபத்தில் அதிஷ்டவசமாக தப்பிய மனைவி மற்றும் குழந்தை! உயிரிழந்த கணவனின் இறுதி பேஸ்புக் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விமான விபத்தில் அதிஷ்டவசமாக தப்பிய மனைவி மற்றும் குழந்தை! உயிரிழந்த கணவனின் இறுதி பேஸ்புக் பதிவு!

கேரளாவில் விமான விபத்தில் உயிரிழந்த நபர், இறப்பதற்கு முன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் சொந்த ஊருக்கு திரும்புகிறோம் என்று மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

விபத்தில் சிக்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில், துபாயில் ஏறிய உடனே கேரளாவின் கோழிகோடைச் சேர்ந்த Sharafu Pilassery என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் back to home, அதாவது சொந்த ஊருக்கு திரும்புகிறோம் என்று மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.

ஆனால் அவரின் அந்த ஆசை நிறைவேறவில்லை. விமான விபத்தில் சிக்கி தற்போது வரை உயிரிழந்துள்ள 17 பேரில் இவரும் ஒருவர், ஆனால் இவருடன் வந்த மனைவி மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Sharafu Pilassery துபாயின் தனது மனைவி மற்றும் மகளுடன் நீண்டகாலமாக வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.