
விபத்தில் சிக்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில், துபாயில் ஏறிய உடனே கேரளாவின் கோழிகோடைச் சேர்ந்த Sharafu Pilassery என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் back to home, அதாவது சொந்த ஊருக்கு திரும்புகிறோம் என்று மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.
ஆனால் அவரின் அந்த ஆசை நிறைவேறவில்லை. விமான விபத்தில் சிக்கி தற்போது வரை உயிரிழந்துள்ள 17 பேரில் இவரும் ஒருவர், ஆனால் இவருடன் வந்த மனைவி மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Sharafu Pilassery துபாயின் தனது மனைவி மற்றும் மகளுடன் நீண்டகாலமாக வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
