கொரோனா தொற்றுக்குள்ளாகிய முன்னாள் கிரிக்கட் வீரர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்குள்ளாகிய முன்னாள் கிரிக்கட் வீரர் பலி!

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேதன் செளகான் உயிரிழந்துள்ளார்.

சேதன் செளகானுக்கு கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் லக்னெளவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதன்பிறகு குருகிராம் பகுதியில் உள்ள வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


$ads={1}

மேலும் அவருக்கு சிறுநீரகம் செயலிழந்ததால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

$ads={2}

இவர் இந்திய அணிக்காக 40 டெஸ்ட், 7 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

72 வயது சேதன் உத்தரப் பிரதேச மாநில அமைச்சராகவும் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.