சவூதியில் இருந்து இலங்கைக்கு விசேட விமானம்! வியாழன் அன்று ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சவூதியில் இருந்து இலங்கைக்கு விசேட விமானம்! வியாழன் அன்று ஆரம்பம்!

சவூதி அரேபியாவின் தமாமிலிருந்து இலங்கைக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (27) சிறப்பு மீள் அழைத்துவரும் விமானம் ஒன்று சேவையில் அமர்த்தப்படும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜித்தாவில் உள்ள துணைத் தூதரகம் ஆகியோருடன் இணைந்து இந்த விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தேசிய விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆர்வமுள்ள நபர்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறும், வரையறுக்கப்பட்ட சீட்டுக்கள் காரணமாக, முதலில் வந்தவர்களுக்கு முதல் சேவை அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் பயணிகள் தங்கள் PCR சோதனை அறிக்கைகளை கட்டாயமாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.