எதிரணியிலுள்ள கட்சிகள் எம்முடன் இணைந்தாலும் பதவிகள் வழங்க மாட்டோம்! பிரதமர் திட்டவட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிரணியிலுள்ள கட்சிகள் எம்முடன் இணைந்தாலும் பதவிகள் வழங்க மாட்டோம்! பிரதமர் திட்டவட்டம்!

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை ஆதரிக்க வந்தால் பின்வாங்க முடியாது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிரணியிலுள்ள சிறிய அரசியல் கட்சிகள் அரசாங்கத்தோடு இணைந்தால் எவருக்கும் அமைச்சர் பதவிகளை வழங்க மாட்டோம் என மஹிந்த தெரிவித்துள்ளார்.

குறித்த சிறிய அரசியல் கட்சிகள் அரசாங்கத்தில் இணையத் தயாராக இருப்பதாக வதந்திகள் வந்தாலும், இதுபோன்ற எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

எதிரணியிலுள்ள சிறிய அரசியல் கட்சிகள் அரசாங்கத்தோடு இணையவுள்ளமை தொடர்பான செய்தி குறித்து ஒரு சிங்கள ஊடகம் எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.