தனது தொடக்க உரையில் நீதி அமைச்சர் முன்னிலைப்படுத்திய 7 முக்கிய விடயங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது தொடக்க உரையில் நீதி அமைச்சர் முன்னிலைப்படுத்திய 7 முக்கிய விடயங்கள்!

தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் நீதித்துறையில் எதிர்காலத்தில் சீர்திருத்தப்பட வேண்டிய சில முக்கிய பகுதிகளை நீதி அமைச்சர் அலி சப்ரி எடுத்துரைத்துள்ளார்.

நீதி அமைச்சில் அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டபோது அமைச்சர் இந்த அவதானிப்பை மேற்கொண்டார்.

அமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சகம் அரசியலமைப்பையோ அல்லது பொதுமக்களையோ எந்த வகையிலும் பாதிக்க அனுமதிக்காது என்று சபதம் செய்தார்.

கடந்த 70 ஆண்டுகளில் இன, மத பிரச்சினைகள் காரணமாக வீணடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இலங்கையர்கள் ஐக்கியமாக முன்னேற சரியான சூழ்நிலையை உருவாக்குவதாக உறுதியளித்தார்.

கடமையை பொறுப்பேற்ற பின்னர், தனது முதல் கட்ட நடவடிக்கையாக திருத்தி அமைக்கவுள்ள பின்வரும் 07 முக்கிய பகுதிகளை நீதி அமைச்சர் எடுத்துரைத்தார்.


  1. நீதி அமைச்சகத்தை மதிப்பாய்வு செய்தல்.
  2. நீதித்துறை அமைப்பை மாற்றுவதற்கான திட்டத்தை உருவாக்குதல்.
  3. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்கள்.
  4. போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள்.
  5. சிறைச்சாலைகளுக்குள்ளும் வெளியேயும் போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை.
  6. நீதிமன்ற நடவடிக்கைகளில் தாமதத்தை குறைத்தல்.
  7. மிகவும் மோசமான துறை என புகாரளிக்கப்பட்டு வரும் நீதிமன்ற பதிவாளர் அலுவலகங்களை சீர்திருத்தல்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.