மஞ்சள் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்படும்! -ஜனக வக்கும்புர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஞ்சள் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்படும்! -ஜனக வக்கும்புர

நாட்டில் நிலவிவரும் மஞ்சள் பற்றாக்குறை காரணமாக அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மஞ்சள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என கரும்பு, சோளம், முந்திரி, மிளகு, இலவங்கப்பட்டை, கராம்பு, வெற்றிலை உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

மஞ்சள் பற்றாக்குறையை நீக்குவதற்காக, எதிர்வரும் ஒன்றரை ஆண்டுக்குள் நாட்டில் மஞ்சள் பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் பின்னர் தேவைக்கு ஏற்ப மாத்திரமே இறக்குமதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதியுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்தாலோசித்து இதற்கான நடைமுறைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தப்படும் மஞ்சள் தொகையை இலங்கை கடற்படை பறிமுதல் செய்த பல சம்பவங்கள் சமீபத்திய காலங்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.