கோர விபத்தில் தந்தை மற்றும் 02 வயது குழந்தை பலி; கலகெதர பகுதியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோர விபத்தில் தந்தை மற்றும் 02 வயது குழந்தை பலி; கலகெதர பகுதியில் சம்பவம்!

கலகெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி - குறுநாகல் வீதியின் கலகெதர சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள் பலியாகியுள்ளனர்.

நேற்று (23) இரவு 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறுநாகல் நோக்கி பயணித்த கொள்கலன் லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த கார் ஒன்றில் மோதி, மற்றுமொரு கார் மீதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த லொறி சாரதி உட்பட 6 பேர் கலகெதர மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, கொள்கலன் லொறி கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளான காரின் 36 வயதான சாரதி மற்றும் 2 வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலங்கள் கலகெதர மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.