மேலும் இருவர் தொற்றுக்கு இனம்காணப்பட்டனர்; முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் இருவர் தொற்றுக்கு இனம்காணப்பட்டனர்; முழு விபரம்!

இலங்கையில் இன்றைய தினம் மொத்தம் 06 பேர் கொரோனா தொற்றுக்கு இனம்காணப்பட்டனர்

அதன்படி, இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,953 ஆக அதிகரித்துள்ளது.

மலேஷியாவில் இருந்து வந்த இருவருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கும், கென்யாவில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் துபாயில் இருந்து வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோன தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 07 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ள நிலையில் இதுவரை 2,805 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் தற்பொழுது 136 பேர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்றைய தினம் IDH வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளர் ஒருவர் உயிரிழந்தார்.

அதன்படி, இந்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.