தனது சொந்த கணவர் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில், குறித்த இந்தப் பெண் ஒரு தொழிலதிபருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளில் மேலும் தெரிய வருவதாவது,
குறித்த அந்த பெண்ணின் மகளை சுற்றுப்பயணம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று, ஒரு ஹோட்டலில் இரண்டு தனித்தனி அறைகளை இரவு முழுவதும் முன்பதிவு செய்ததாக தெரிய வந்துள்ளது.
பின்னர் அவர் தனது 13 வயது குழந்தைக்கு போதைப்பொருள் செலுத்தி, தனது கள்ளக்காதலனுடன் பாலியல் உறவு கொள்ள தனது குழந்தையை தயார்படுத்தியுள்ளார்.
அதிஷ்டவசமாக சுயநினைவுக்கு திரும்பிய குறித்த குழந்தை, என்ன நடந்தது என்பதை உணர்ந்து தனது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார். பின்னர் அவருடைய தாய் மற்றும் அந்த இளைஞன், இந்த சம்பவம் வெளிவந்தால் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகளை கூறி அக்குழந்தையை அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தை குழந்தை உறவினர்களிடம் தெரிவித்ததையடுத்து சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவின்படி குழந்தை மேலதிக பரிசோதனைகளுக்கு உட்படுத்த அக்கரைப்பற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.