இலங்கையில் இது வரையில் ஒரே நாளில் பதிவான அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் - முழுக் கண்ணோட்டம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இது வரையில் ஒரே நாளில் பதிவான அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் - முழுக் கண்ணோட்டம்

இலங்கையில் இன்றையதினம் மாத்திரம் 296 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் 283 அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களாகும்.

இவர்களில் இந்தியாவில் இருந்து வந்தவர்களில் 9 பேரும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்தவர்களில் 3 பேரும், பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 450 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஆயிரத்து 980 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 459 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 11 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.