கொரோனா வைரஸ் அறிகுறியான காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் பின்னர் சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலாபம் மாரவில பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை வைத்தியசாலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.