அதேநேரத்தில் ஒத்தி வைக்கப்பட்ட ஆசியக் கிண்ணத் தொடரை 2021 ஜூன் மாதம் இலங்கையில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த ஆண்டு போட்டிகளை நடத்திவிருந்த பாகிஸ்தான், அடுத்த ஆண் தொடரை நடத்தும் இலங்கையுடன் உரிமைகளை பரிமாறிக் கொண்டது.
அதேநேரத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கான உரிமையினையும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிறுவனம் கோரியுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட ஆறு நாடுகளை உள்ளடக்கிய இருபதுக்கு - 20 ஆகியக் கிண்ண போட்டிகளை நடத்த முடியும் என நம்புவதாக ஏ.சி.சி. தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறெனினும் பயணக் கட்டுப்பாடுகள், நாடு சார்ந்த தனிமைப்படுத்தபடுத்தல் தேவைகள், அடிப்படை சுகாதார சவால்கள் மற்றும் சமூக தொலைதூர நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடரை நடத்துவதற்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளன.