மாத்தறை மாவட்டத்தில் இருந்து இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடவிருந்த இரண்டு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வேட்பாளர்கள் இன்று (10) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சிக்கு தாவியுள்ளானர்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய போது அவ்விரு வேட்பாளர்களும் தமது ஆதரவை SLPP க்கு தெரிவித்தனர்.
SLPP வின் மாத்தறை மாவட்ட பிரதான வேட்பாளர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
மாத்தறை மாவட்டத்தில் இருந்து போட்டியிட UNP கட்சியிலிருந்து வேட்பு மனுக்களை சமர்ப்பித்த சந்தன பிரியந்த மற்றும் S. W பிரேமரத்ன என்பவர்களே இவ்வாறு SLPP க்கு கட்சி தாவியுள்ளனர்.