கேகாலையில் துப்பாக்கிச் தொழிட்சாலை; ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கேகாலையில் துப்பாக்கிச் தொழிட்சாலை; ஒருவர் கைது!

கேகாலை - ருவான்வெல்ல, அம்புலாகல பிரதேசத்தில் வீடொன்றில் இயங்கி வந்த துப்பாக்கி தொழிற்சாலையை நேற்று சுற்றிவளைத்த பொலிஸ் திட்டமிட்ட குற்றச் செயல்களை விசாரிக்கும் பிரிவினர் அங்கிருந்த ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் பல ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

வீட்டில் இருந்த 5 துப்பாக்கிகள், பாதியளவில் தயாரிக்கப்பட்டிருந்த துப்பாக்கி பாகங்கள், தோட்டாக்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் நாட்டின் பல பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதாள உலகக்குழுவினரின் பயன்பாடுகளுக்காக இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.