மீள் அழைத்துவரும் பணியில், துபாய் மற்றும் அபுதாபியில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீள் அழைத்துவரும் பணியில், துபாய் மற்றும் அபுதாபியில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்!

மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மீது உடனடி கவனம் செலுத்தி, அங்கிருக்கும் இலங்கையர்களை மீள் அழைத்துவரும் பணிகளில் விமானங்களை மீண்டும் சேவையில் அமர்த்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.

$ads={1}

கொரோனா தொற்று நோயால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீட்கும் பணிகள் கடந்த மார்ச், 2020 முதல் அரசாங்கத்தால் பகுதி பகுதியாக இடம்பெற்று வந்தது.

இருப்பினும், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா வைரஸ் பரவலின் விளைவாக தனிமைப்படுத்தல் மையங்களில் பற்றாக்குறை ஏற்பட்டதால், ஜூலை 15 முதல் மாலத்தீவிலிருந்து வந்த கடைசி விமானத்துடன் அனைத்து செயல்முறைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக துபாயில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

நாட்டிற்கு மீள் அழைத்துவரும் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும், அவர்களுக்கு தேவையான தனிமைப்படுத்தல் வசதிகளை வெகுசீக்கிரம் அமைக்க இராணுவத்துடன் தொடர்ந்து விவாதித்து வருவதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

$ads={2}

'தனிமைப்படுத்தல் மையங்கள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டவுடன், அரசாங்கம் உடனடியாக மீள் அழைத்துவரும் விமான சேவையை தொடங்கும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய் மற்றும் அபுதாபியில் சிக்கித் தவிப்பவர்களை உடனடியாக மீள் அழைத்துவரும் பணிகளில் முக்கிய கவனம் செலுத்தப்படும், ஏனெனில் வெளிநாடுகளில் கஷ்டங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கு உதவ வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும்.' என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், நான்கு தனித்தனி விமானங்களில் 52 பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்து 04, கத்தாரிலிருந்து 14, சென்னையிலிருந்து 13 மற்றும் 21 என வெவ்வேறு இரு விமானங்களில் என்று மொத்தமாக 52 பேர் அழைத்து வரப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தல் மையங்களில் கட்டாய தனிமைப்படுத்தளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.