மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தபால் திணைக்களத்துக்கு மொத்தமாக ஒரு கோடி 69 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் சுமார் 1.5 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் இருக்கின்றன.
அவை வாக்காளர்களின் பிரதேசங்களில் அமைந்திருக்கும் தபால் நிலையங்களில் இருந்து எதிர்வரும் 5 ஆம் திகதிவரை உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் வேட்பாளர்களினால் தனிப்பட்ட ரீதியில் வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் தேர்தல் பிரசார பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை நாளை 30 ஆம் திகதியுடன் நிறுத்தப்படும் என்றார்.