மீண்டும் ஹீரோயின் ஆன பெண் பொலிஸ் அதிகாரி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் ஹீரோயின் ஆன பெண் பொலிஸ் அதிகாரி!

varuni-bogahawatta-police
தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு ரியலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் மேடை வடிவமைப்பாளராக கடமையாற்றிய 54 வயதான ஒருவர், அதன் ஊடாக தான் முன்னெடுத்துச் சென்ற பிரத்தியேக ஆங்கில வகுப்பு ஊடாகவும் அறிமுகமாகிய சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்து, புகைப்படம், வீடியோ எடுத்த சம்பவம் குறித்த விசாரணைகள் முறைப்பாடுகள் எதுவும் இன்றி கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவே ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபரால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் அல்லது,  தனது பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கும் பெற்றோர் அது தொடர்பில் 1929 எனும் அவசர அழைப்பு இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் அவர் கோரினார்.

தனியார் தொலைக் காட்சிகளில் பல்வேறு ரியலிட்டி ஷோ நிகழ்வுகளில் மேடை வடிவமைப்பாளராக கடமையாற்றிய 54 வயதான குறித்த சந்தேக நபர், வெளிநாடு ஒன்றில்  உள்ள ஒருவருக்கு துஷ்பிரயோகம் செய்யப்படும் சிறுவர் ஒருவரின் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்வையிட்டுள்ள அங்குள்ள ஒருவர், அது தொடர்பில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அவற்றை  வட்ஸ்அப் ஊடாக அனுப்பியுள்ளார்.


பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவை இந்நிலையிலேயே அது குறித்து விசாரிக்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குணசேகரவுக்கு  அதிகாரம் வழங்கியுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இது தொடர்பில்  விசேட விசாரணை நிபுணத்துவம் கொண்ட மாத்தறை சிறுவர் மகளிர் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவை கொழும்புக்கு அழைத்து விசாரணையின் பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே, மஹரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெபானம – பன்னிபிட்டிய எனும் முகவரியைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

"பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த தலைமையில், கொள்ளுப்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் இடம்பெற்ற விசாரணைகளில், இதுவரை மூன்று ஆண் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தான் நடத்திச் சென்ற தனியார் வகுப்பு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு ரியலிட்டி ஷோ நிகழ்வுகளில் மேடை வடிவமைப்பின் போது பழகி அறிமுகமான சிறுவர்களை சந்தேக நபர் இவ்வாறு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.


2018 ஆம் ஆண்டு முதல் சந்தேக நபர் இந்த குற்றத்தைச் செய்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்தது. அவர் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்து அதனை புகைப்படம், வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அவற்றை தனிப்பட்ட ரீதியில் பலருக்கு அனுப்பியுள்ளதாக தகவல் உள்ளது. ஏதேனும் ஆபாச இணையத் தாங்களுக்கு அவரால் வீடியோ காட்சிகள் அனுப்பட்டனவா எனவும் விசாரணை இடம்பெறுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்டிருந்தால் அந்த காட்சிகளை இணையத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். சந்தேக நபரின் வீட்டிலிருந்து மேலும் பல சிறுவர்களின் புகைப்படங்கள் மீட்கப்பட்டுள்ளன. அது குறித்து விசாரித்து வருகின்றோம். இவர்களைவிட மேலும் பல சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.

இதுவரைச் அந்தேக நபரிடமிருந்து மேசைக் கணினி, கமராக்கள் 2, பென் ட்ரைவ் ஒன்று, மெமரி சிப் ஒன்று, 137 இறுவெட்டுக்கள், 17 சிறுவர்களின் புகைப்படங்கள், கையடக்கத் தொலைபேசி ஒன்று என்பன விசாரணைகளுக்காக பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன. அவை அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஊடாக அல்லது கணினி தொடர்பிலான விசேட நிபுணர் ஒருவர் ஊடாக பரிசீலிக்கப்பட்டு அவற்றில் உள்ள உள்ளடக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறும். சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்" என தெரிவித்தார்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் மேலும் இரு சந்தேக நபர்களைக் கைது செய்யவுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளிபப்டுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்லதாகவும் விசாரணைகலுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.