குறித்த இவ்விரு சிறுவர்களின் ஒருவரின் தந்தை நேற்று மாலை முதல் இரண்டு இளைஞர்களையும் காணவில்லை என தெரிவித்தார்.
சிறுவர்களை நேற்று முதல் காணாமல் போனதாக குடும்பத்தினர் இன்று காலை கட்டுகஸ்தொட்டை போலீஸ் பிரிவில் புகார் வழங்கியதாக சிறுவனின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவர்கள் இருக்கும் இடம் குறித்து அறிவிக்கப்பட்டதும், கட்டுகஸ்தொட்டையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு வந்ததாக அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
அவர் குறித்த சிறுவனிடம் பேச்சுக்கொடுக்க முற்பட்டவேளை, இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு ஒன்றாக நீர்த்தேக்கத்தில் குதித்தனர் என தெரிவித்தார்.
குறித்த சிறுவர்கள் இருவரும் நவயாலதென்ன எனும் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தரம் 10 மற்றும் 11 மாணவர்களான இருவரும் தங்கள் காதல் விவகாரத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.