நீர்த்தேக்கத்தில் பாய்ந்து 17 மற்றும் 16 வயது சிறுவர்கள் தற்கொலை; கண்டியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீர்த்தேக்கத்தில் பாய்ந்து 17 மற்றும் 16 வயது சிறுவர்கள் தற்கொலை; கண்டியில் சம்பவம்!

இன்று (07) காலை கண்டியில் உள்ள பொல்கொல்லை நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இவ்விரு சிறுவர்களின் ஒருவரின் தந்தை நேற்று மாலை முதல் இரண்டு இளைஞர்களையும் காணவில்லை என தெரிவித்தார்.

சிறுவர்களை நேற்று முதல் காணாமல் போனதாக குடும்பத்தினர் இன்று காலை கட்டுகஸ்தொட்டை போலீஸ் பிரிவில் புகார் வழங்கியதாக சிறுவனின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அவர்கள் இருக்கும் இடம் குறித்து அறிவிக்கப்பட்டதும், கட்டுகஸ்தொட்டையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு வந்ததாக அவர் கூறினார்.                 

மேலும் அவர் கூறுகையில்,

அவர் குறித்த சிறுவனிடம் பேச்சுக்கொடுக்க முற்பட்டவேளை, இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு ஒன்றாக நீர்த்தேக்கத்தில் குதித்தனர் என தெரிவித்தார்.

குறித்த சிறுவர்கள் இருவரும் நவயாலதென்ன எனும் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தரம் 10 மற்றும் 11 மாணவர்களான இருவரும் தங்கள் காதல் விவகாரத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.