அதன்படி, இறந்தவர்கள் 59 வயது ஆண், 55 வயது பெண் மற்றும் அவர்களது 34 வயது மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 01ஆம் திகதி குறித்த இந்த கொலைகள் பதிவாகியுள்ளன, மேலும் கோவிட்19 தொற்று பரவல் காரணமாக உடல்களை இலங்கைக்கு எடுத்து வருவதில் நான்கு மாத தாமதம் ஏற்பட்டுள்ளது.
இறந்த தம்பதியினரின் மற்றொருமொறு மகள் இலங்கையில் வசித்து வருகிறார். அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, அவரது குடும்பத்தினர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததாக சகோதர ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த கொலையை அவர்களின் குடும்பத்தின்படி, கட்டாரில் வசித்து வரும் ஒரு இலங்கையர் செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதிலும், அங்கு இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொலைகள் குறித்து நியாயமான தீர்ப்பு மற்றும் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.