ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்கள்; 38 பூரணமற்ற கோப்புக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்கள்; 38 பூரணமற்ற கோப்புக்கள்!

கடந்த வருடம் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைகளின், அடிப்படையிலான மேலும் 38 கோப்புகளை சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான கோப்புகள், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களினால், சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருந்ததாக அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெறிவித்துள்ளார்.

முழுமையற்றதாகக் காணப்படும் குறித்த கோப்புகளுக்கமைய கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத வகையில் அவை காணப்படுவதால் அவற்றை திருப்பியனுப்ப சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.