ஆஸ்திரேலியாவில் இருந்து மேலும் ஒரு குழு நாடு திரும்பினர்!
Posted by Yazh NewsAuthor-
கொரோனாவின் விளைவால் நாடு திரும்ப முடியாமல் அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த மேலும் 229 இலங்கையர்கள் இன்று (11) பிற்பகல் ஆஸ்திரேலியா, மெல்போர்னிலிருந்து நாடு திரும்பினர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாகவே இவர்கள் அனைவரும் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
குறித்த விமானத்தில் வருகைத் தந்திருந்த அனைவரும் உயர்கல்வியை கற்பதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.