கொழும்பில் நேற்றைய தினம் (10) வழக்கு ஒன்று தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தன போதைவஸ்து தடுப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவினால் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தன்னால் குறித்த ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.