பலநூறு மில்லியன் ரூபா பணத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட வங்கிக் கணக்கு; ஆறு பேர் அதிரடி கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பலநூறு மில்லியன் ரூபா பணத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட வங்கிக் கணக்கு; ஆறு பேர் அதிரடி கைது!

இலங்கையில் 1800 மில்லியன் ரூபாவுடன் வங்கி கணக்கு ஒன்றை பேணிவந்த போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1040 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலை அடுத்து இவர்கள் நேற்று (25) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்படும் போது அவரது கையில் இருந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணத்தை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போதை பொருள் விற்பனையாளர்களில் பிரதானியை கைது செய்ய முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போதைப்பொருள் வர்த்தக வலையமைப்பு கல்கிசை மற்றும் மொரட்டுவ பிரதேசத்தில் இருந்து முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த வலையமைப்பின் முக்கிய பிரதானி சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதி என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.