இரண்டாவது அலையை தடுக்க முடியாது; ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரண்டாவது அலையை தடுக்க முடியாது; ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று (18) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது.

இரண்டாவது அலை ஆகஸ்ட் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ இலங்கையைத் தாக்க கூடும்.

இலங்கையில் PCR சோதனையை அதிகரிக்கத் தவறியமையே இரண்டாவது அலைக்கு வழி வகுத்துள்ளது." என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.