அதன்படி, ரணில் விக்ரமசிங்கவிடம் 4 மணிநேரங்கள் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் அவர்கள் வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை பெறவே, குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் அங்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ளுமாறு, சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.