மாலைதீவு மற்றும் மடகஸ்காரிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 03 பேரே இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களாவர்.
இன்று (03) இரவு 8.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் அறிவிப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,069 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,863 ஆக அதிகரித்துள்ளது.
அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 2,069 பேரில் தற்போது 195 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, இது வரை 1,863 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.
மேலும், மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 57 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.