ராஜித்த, ரஞ்சன் உள்ளிட்ட 7 பேருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ராஜித்த, ரஞ்சன் உள்ளிட்ட 7 பேருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை!!

ராஜித்த சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க, ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

வடமேல் கடற்படை கட்டளைத்தளபதி ரியர் அத்மிரால் டி.கே.பி திஸாநாயக்கவினால் குறித்த ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக இவர்களுக்கு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

2008 ஆண்டு 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் பொய்யான சாட்சிகளை தாக்கல் செய்து தனக்கு எதிராக மேல்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததாக தெரிவித்து டி.கே.பீ திஸாநாயக்கவால் குறித்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தெரிவித்து இவ்வாறு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.