
ராஜாங்கனை சுகாதார வைத்திய அலுவலர் பிரிவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகளை கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் இரண்டு கட்டங்களின் கீழ் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் இருந்து பல புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டமையினால் ராஜாங்கனை பகுதிக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
எனினும் கடந்த 19ஆம் திகதி முதல் இதுவரை இந்த பிரதேசங்களில் எந்தவொரு தொற்று நோயாளரும் இணங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ராஜாங்கனை பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை கருத்திற் கொண்டே சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக பயணக்கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.