PNB மீதுள்ள நம்பிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலை; போலி நாணயம் அச்சிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PNB மீதுள்ள நம்பிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலை; போலி நாணயம் அச்சிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு!

குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால், கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் (PNB) அதிகாரிகள், போதைப் பொருள் விற்பனைக்கு மேலதிகமாக போலி நாணயத்தாள் அச்சிடும் குற்றத்திலும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இந்த தகவல் நேற்று (08) தெரியவந்துள்ளது.

இது சம்பந்தமாகவும் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரைணை திணைக்கள அதிகாரிகளுடன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவிற்கு அறிவித்துள்ளார்.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் கைது செய்துள்ள பொலிஸ் அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னர் தெரியவந்த தகவல்களை அடுத்து, சில சந்தேக நபர்களிடம் இருந்து 31, 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்தே சந்தேக நபர்கள், போதைப் பொருள் வியாபாரத்திற்கு மேலதிகமாக போலி நாணயத்தாள் அச்சிட்ட குற்றத்திலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

குற்றவியல் விசாரணை திணைக்களம் இது சம்பந்தமான தனியான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் திலிப பீரிஸ் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.