கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இந்த தகவல் நேற்று (08) தெரியவந்துள்ளது.
இது சம்பந்தமாகவும் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரைணை திணைக்கள அதிகாரிகளுடன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவிற்கு அறிவித்துள்ளார்.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் கைது செய்துள்ள பொலிஸ் அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னர் தெரியவந்த தகவல்களை அடுத்து, சில சந்தேக நபர்களிடம் இருந்து 31, 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்தே சந்தேக நபர்கள், போதைப் பொருள் வியாபாரத்திற்கு மேலதிகமாக போலி நாணயத்தாள் அச்சிட்ட குற்றத்திலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குற்றவியல் விசாரணை திணைக்களம் இது சம்பந்தமான தனியான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் திலிப பீரிஸ் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.