உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலையில்
ஏற்ற இறக்கம் நிகழ்வதாலும், இலங்கையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாலுமே தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை 100,000 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
22 கரட் தங்கத்தின் பெறுமதி 93,000 ரூபாவாக காணப்படுவதுடன், செய்கூலி மற்றும் சேதாரத்துடன் 22 கரட் தங்க நகையின் இன்றைய விலை 97,000 ரூபாவாகும்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னைய காலப்பகுதியில் ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி 70,000 என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆகஸ்ட் மாத அளவில் தங்கத்தின் விலை சாதாரண நிலைமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.