10 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
W.C சில்வா மாவத்தைக்கு அருகாமையிலுள்ள காலி வீதியிலுள்ள கட்டட தொகுதிகளில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ அனர்த்தம் காரணமாக 5 கடைகள் முழுமையாக எரிந்துள்ளதுடன் அருகிலுள்ள வீடொன்று பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, சம்பவ இடத்திலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.