ஒரே நாளில் 470 நபர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரே நாளில் 470 நபர்கள் கைது!

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 470 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட போதைப்பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதனை தவிர வேறு குற்றங்கள் இழைத்த 23 பேரும் கைது செய்யப்பட்டவர்களுள் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் ஆலோசனையின் அடிப்படையில் நேற்று (04) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.