அதற்கமைய நாளை தினம் முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 9ஆம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் நாட்டிற்கு வந்த விமான பயணிகளுக்கு தீர்வையற்ற பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்காக நாளை முதல் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை விமான நிலையத்திற்கு வருகைத்தர வேண்டும்.
இது தொடர்பில் மேலதிக தகவல் பெற 0112263017 என்ற இலக்கத்தில் அழைப்பேற்படுத்தி தகவல் பெற முடியும் என விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.